நான் பிறந்தது யாழ்பாணத்தில் உரேழு எனும் கிராமம். அங்கே நான் எனது முதல் எட்டு வயதுவரை இருந்தேன். அங்கே நான் கல்வி பயின்றது Uduvil Girls' College.
அதன் பின் காலத்தின் கட்டாயத்தால் எனது குடும்பம் கொழும்பிற்கு புலம்பெயர்ந்தது. அங்கேகூட நான் வாழ்ந்தது எட்டு வருடம்தான். அங்கே நான் படித்தது பொதுவாக யாழ் மைந்தர் படிக்கும் கொ/பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில்தான். க.பொ.த(சாதாரண தரம்) வரை படித்தேன். அதன் பின்பு லண்டன் A/L செய்ய Royal Institute இல் சேர்ந்தேன். இருப்பினும் பிரேம்நாத் சேரிடம் டியூஸன் போவதுண்டு. இங்கே டியூஸனில் வகையீடு / தொகையீடு படிக்கும்போது, அங்கே RI யில் கணக்கு என்றால் என்ன? very basic கணக்கு சொல்லி கொடுத்தார்கள். இவ்வாறான குழப்பமான மனநிலையில் இருக்கும்போது தான் எனக்கு சிங்கப்பூரில் உள்ள ஓர் பலதுறைக்கல்லூரியில் (Temasek Polytechnic) இருந்து நான் படிக்க அனுமதி கடிதம் (offer Letter) அனுப்பி இருந்தார்கள். (புலமைப்பரிசிலுடன்). உடனே சிங்கம் இதுதான்டா நல்ல வாய்ப்பு எண்டு கிளம்பிடிச்சு.
எனது சிங்கை பயணம் பற்றி அடுத்த பதிப்பில் தொடரும்...


No comments:
Post a Comment