Wednesday, January 7, 2009

சேலை (புடவை)


நம் பெண்கள் சேலை அணிந்தாலே தனி அழகுதான். விடுமுறையில் இருக்கும் நான் புத்தகம் ஒன்றை இரவல் வாங்குவதற்காக (வீட்டில் இருந்து இருந்து உடம்பில் அலுப்புத்தட்டிய காரணத்தால்) எனது பல்கலைகழகத்திற்கு செல்லும் வழியில் ஒரு பெண்ணை பார்த்தேன். அவருக்கு இன்று பட்டமளிப்பு விழா என்று நினைக்கிறேன், சேலை அணிந்து போய்க்கொண்டிருந்தார். (நான் அவரை பார்த்து ஜொல்லு விட்டது வேறு விடயம்).

இன்று பெண்கள் சேலை கட்டுவது மிக அருகாகி வருவதால் (இவர் மட்டும் என்ன வேட்டி கட்டுவாரா என நீங்கள் நினைப்பது புரிகிறது), இன்று அதை பற்றி எழுதலாமே என தோன்றிற்று...

பெண்கள் சேலை உடுக்கும் வழமை சிந்துவெளி நாகரீகத்தின்போது உதயமானதாகும். இன்று அது ஒரு மரபாக மாற்றம் கண்டு இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், நேபாள பெண்களினால் அணியப்படுகிறது.

இது புழக்கத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், இதை கட்டும் முறைகளில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. மிகப் பொதுவான முறை, ஒரு முனையை இடுப்பிலிருந்து பாதம் வரை மறைக்கும்படி சுற்றிக் கட்டியபின்னர் மறு முனையை மார்பை மறைக்கும் படி தோளுக்கு மேலாகப் போட்டுத் தொங்க விடுவதாகும்.

சேலைகளில் பல விதம் உள்ளன. காஞ்சிபுரபட்டு தொடங்கி இன்று ச்போன்(Chiffon) ,ஜோர்ஜ்ட் (Georgete) என்று வகைகள் ஏராளம். ஆனால் திருமணத்தின்போது மணமகள் முதல் தொட்டு அனைத்து பெண்களும் விரும்பிக்கட்டுவது (இது எனது ஊகம்) காஞ்சிபுர சேலையைத் தான். இப்பொழுது ஜப்பான் சில்க்ஸ்ஸும் மிகவும் பிரபலமாக உள்ளது. (நான் சிங்கையில் இருந்து இலங்கைக்குச் செல்லும்போது இதைத் தான் வாங்கி வரச் சொல்வார்கள், இலங்கையில் ஜப்பான் சில்க்ஸ் கிடைப்பது இல்லையோ தெரியாது).

பி.கு : எல்லாம் கேள்வி ஞானம்தான். ஆனால் எனக்கும் சேலைக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதுவா!! நான் குழந்தையாக இருந்தபோது ஏணையில் தூங்கியது.


1 comment:

  1. ஹா..ஹா..அருமையாக எழுதுகிறீர்கள்..தொடருங்கள்..

    ReplyDelete