என் மனம் கவர்ந்த பாடல். நானே ஒலி நாடாவை கேட்டு தமிழில் பதித்தது. வரிகளில் ஏதாவது தவறு இருந்தால் என் காதை மன்னிக்கவும்
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன் வானம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீயேந்தீ
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
சரணம் 1
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ள தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா
நீ நின்ற இடம் என்றால் விலை ஏறிப் போகாதோ
நீ செல்லும் வழி என்றால் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை.. ஓஓ
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன் வானம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை
சரணம் 2
தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
ஏக்கங்களை தூவிச் சென்றாய்
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வீறு
நில் என்று நீ சொன்னால் என் காலம் நிற்காதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
பெண் குரல் :
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை.. ஓஓ
இரு குரல் :
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன் வானம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை
ஆண் குரல் :
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீயேந்தீ
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி


காது நல்ல காதுதான் போல ...
ReplyDeleteநன்றி ஜமால்
ReplyDeleteஎனக்கும் பிடித்த பாடல் தான்.. பார்த்தவரை பிழைகள் இல்லை.. :)
ReplyDeleteVery gud Song.....!
ReplyDelete- Kiri